வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம்வத்திக்கான் வானொலி
வத்திக்கான் வானொலி   
more languages  

     முகப்பு பக்கம் > நீதியும் அமைதியும்  >  2012-06-16 16:14:49
A+ A- இந்தப் பக்கத்தை அச்சிட...



ஆயுத வியாபாரத்தை நிறுத்துமாறு ஆசிய ஆயர்கள் உலகத் தலைவர்களுக்கு அழைப்பு



ஜூன்16,2012. உலகில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு முக்கிய காரணமாக ஆயுத வியாபாரம் இருக்கின்றது என்று சொல்லி, ஆயுத வியாபாரத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் ஆசிய ஆயர்கள்.
ஐ.நா.வால் கொண்டுவரப்பட்ட ஆயுத வியாபாரத் தடை ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வருகிற ஜூலை 2ம் தேதிக்கும் 27ம் தேதிக்கும் இடைப்பட்ட நாள்களில் நியுயார்க்கில் உலக வல்லரசுகள் கூட்டம் நடத்தவிருப்பதையொட்டி ஆசிய ஆயர்கள் இவ்வழைப்பை முன்வைத்துள்ளனர்.
FABC என்ற ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் மனிதவள மேம்பாட்டு ஆணையத் தலைவர் பேராயர் Charles Bo வெளியிட்டுள்ள விண்ணப்ப அறிக்கையில், ஆயுத வியாபாரத்தை நிறுத்துவதற்கு ஆசிய ஆயர்கள் முன்வைத்துள்ள குறிப்புக்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
உலக அளவில் இராணுவச் செலவுகளுக்கும் ஆயுத வியாபாரத்துக்கும் ஆண்டுக்கு, ஆயிரம் பில்லியன் டாலர் செலவாகிறது என்று குறிப்பிட்டுள்ள யாங்கூன் பேராயர் போ, நாடுகளின் உள்கட்டமைப்பு, சமூக முன்னேற்றம், நலவாழ்வு, சமூகத்தொடர்புகள் ஆகியவற்றுக்குச் செலவழிக்கப்படும் நிதியைவிட இராணுவத்துக்கென அதிகம் செலவழிக்கப்படுகின்றன என்று குறை கூறினார்.


பகிர்ந்து






நாங்கள் யார் நிகழ்ச்சிகள் நேரம் வானொலி மையத்திற்கு எழுது வத்திக்கான் வானொலியின் தயாரிப்புகள் இணைப்புகள் பிற மொழிகள் தி௫ப்பீடம் வத்திக்கான் நகரம் தி௫த்தந்தை நிகழ்த்தும் தி௫வழிபாடுகள்
இவ்விணையத்தில் உள்ள அனைத்தும் உரிமம் பெற்றவை ©. இணைய ஒருங்கிணைப்பாளர் / இணைய அமைப்பாளர்கள் / சட்ட விதிமுறை / விளம்பரம்