|
திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்

ஜூன்,19,2013. இவ்வாண்டு குளிரும் அதிகமாக இருந்தது, குளிர்காலமும் நீண்டுகொண்டே இருந்தது. அதுபோல் கோடைகாலம் துவங்கியவுடனேயே வெயிலின் உக்கிரம் அதிகரித்துக்கொண்டேச் செல்கின்றது. வெயில்தான் அதிகரிக்கிறது என்றால் புதன் மற்றும் ஞாயிறு தினங்களில் திருத்தந்தையைக் காணவரும் கூட்டமும் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. மறைபோதக உரை வழங்கச் செலவிடும் நேரத்தைவிட, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களிடையே இறங்கிவந்து அவர்களுடன் உரையாடும் நேரம் அதிகமிருப்பதும் இதற்கு ஒரு காரணம் என்று கூறலாம். புதிதாகத் திருமணமான தமபதியர் பெருமெண்ணிக்கையில் திருத்தந்தையைக் காண வருவதும் ஒவ்வொரு வாரமும் அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. திருத்தந்தையும் இவர்களிடம் சென்று உரையாடி அவர்களை ஆசீர்வதிப்பதுடன், ஊக்கம் தரும் வார்த்தைகளையும் வழங்கி வருகிறார். நோயாளிகள் மற்றும் குழந்தைகளை ஒவ்வொருவராகச் சென்று ஆசீர்வதிக்கிறார் ...»

|
 |
 |
|
 |
|
|
| நடப்புச் செய்திகள்................ நடப்புச் செய்திகள்................ |
|
வெளிவேடம் என்பது திருஅவையில் பல வடிவங்களில் உள்ளது - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜூன்,19,2013. சட்டங்களையும், கட்டளைகளையும் கவனமாகப் படிப்பதில் கிறிஸ்தவ வாழ்வு அமைவதில்லை, மாறாக, மகிழ்வுள்ளவரான, தாராள மனம் கொண்டவரான கடவுளைப் புரிந்துகொள்வதற்குத் தடையாக இத்தகைய மனநிலை அமைகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இன்றைய மறையுரையில் கூறினார். குடும்ப வாழ்வுக்கென பணியாற்றும் திருப்பீட அவையின் பணியாளர்களுடன் புனித மார்த்தா இல்லத்தில் இப்புதன் காலை திருப்பலியாற்றியத் திருத்தந்தை ...»

|

|
விழி இழந்தோர் படிக்கும் வகையில் இவ்வுலகில் பெருமளவில் நூல்கள் இல்லை - பேராயர் சில்வானோ தொமாசி

ஜூன்,19,2013. பார்வைத்திறனற்றோர் படிப்பதற்கு ஏற்ற நூல்கள் இல்லாத நிலையை 'புத்தகப் பட்டினி' என்று நாம் அழைக்கக்கூடும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். ஜெனீவாவில் இயங்கும் ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் சார்பில் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், பார்வைத்திறன் அற்றோரின் பிரச்சனைகளைக் கலந்து பேசும் ஐ.நா. கருத்தரங்கு ஒன்றில் இச்செவ்வாயன்ற ...»

|

|
மோதல்களைத் தவிர்க்க, கத்தோலிக்கத் திருஅவை உரையாடல் முயற்சிகளை ஆரம்பித்துள்ளது - ஆப்ரிக்க ஆயர்

ஜூன்,19,2013. மத்திய ஆப்ரிக்கக் குடியரசு நாட்டின் கத்தோலிக்கத் திருஅவை, கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மத்தியில் உரையாடல் முயற்சிகளை ஆரம்பித்துள்ளது என்றும், இந்த உரையாடல் இன்றி, நாட்டில் வன்முறைகள் வெடிக்கும் ஆபத்து உள்ளதென்றும் அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறியுள்ளார். மத்திய ஆப்ரிக்கக் குடியரசு நாட்டில் மதங்களுக்கிடையே நல்லுறவு இல்லாததால், தொடர்ந்து மோதல்கள் நிகழ்ந்து வருகின்ற ...»

|

|
திருத்தந்தை : பகைவர்களையும் அன்புகூராதவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது

ஜூன்,18,2013. உங்கள் பகைவர்களிடமும் அன்புகூருங்கள் என இயேசு நம்மை நோக்கிக் கேட்பது நம்மால் இயலாத ஒன்றாகத் தெரியலாம், ஆனால் நம் பகைவர்களை நாம் அன்புகூரவில்லையெனில், நாம் கிறிஸ்தவர்களாக இருக்கமுடியாது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். பகைவரையும் அன்புகூர இயேசு விடுக்கும் அழைப்பு, உலகினின்று விலகி, அடைபட்ட துறவு மடத்தில் வாழ்வோருக்கும், புனிதர்களுக்கும் மட்டுமே உரியது என நாம் ஒதுக்கத் தேவையில்லை ...»

|

|
நாம் சட்டத்தின் அடிமைகள் அல்ல, இறைவனின் குழந்தைகள் - திருத்தந்தை பிரான்சிஸ்

நாம் சட்டத்தின் அடிமைகளாக இல்லை, மாறாக, இறைவனின் குழந்தைகளாக சுதந்திரத்தைப் பெற்றதன் வழி அருளின் கீழ் வாழ்பவர்களாக உள்ளோம் என, உரோம் மறைமாவட்ட கருத்தரங்கில் பங்குபெற்றவர்களுக்கு இத்திங்களன்று மாலை, வத்திக்கானின் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். நற்செய்தி அறிவிப்புப் பணியில் திருமுழுக்கு வழங்குபவர்களுக்கு இயேசுவின் துணை தேவை என்ற கருத்தை மையமாக வைத்த ...»

|

|
திருத்தந்தை : கிறிஸ்தவத் துணிச்சல் என்பது எப்போதும் தாழ்ச்சியுடன் இணைந்துச் செல்வது

ஜூன்,17,2013. உலகப் பொருட்களின் மீது பற்றற்றவராக, ஒன்றுமில்லாதவராக ஒரு கிறிஸ்தவர் வாழ்ந்தாலும், அவர் எல்லாமும் இருப்பவராக வாழ்கிறார், ஏனெனில் கிறிஸ்து அவருள் நிறைந்திருக்கிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். தான் தங்கியிருக்கும் மார்த்தா இல்லக் கோவிலில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி, மறையுரையாற்றிய திருத்தந்தை, கண்ணுக்கு கண் என்ற நீதியைத்தான் நாம் கேட்டிருக்கிறோம், ஆனால், அதைவி ...»

|

|
திருத்தந்தை : மரணத்துக்கு அல்ல, வாழ்வுக்கு ஆம் என்று சொல்லுங்கள்

ஜூன்,17,2013. மனிதர் பல நேரங்களில் வாழ்வைத் தேர்ந்தெடுப்பதில்லை, வாழ்வின் நற்செய்தியை ஏற்பதில்லை, வாழ்வை மதிப்பதில்லை, ஏனெனில் தன்னலம், சுயஇலாபம், ஆதாயம், அதிகாரம், இன்பம் ஆகியவற்றால் மனிதர் ஆட்சி செலுத்தப்படுகின்றனர் என இஞ்ஞாயிறு மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். Evangelium Vitae என்ற மனித வாழ்வு ஆதரவு தினம் இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, ஞாயிறு காலை 10.30 மணிக்க ...»

|

|
திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரை

ஜூன்,17,2013. பல யூதர்களை நாத்சி அடக்குமுறைகளிலிருந்து காப்பாற்றி, வாழ்வின் நற்செய்திக்குச் சாட்சியாகத் திகழ்ந்த முத்திப்பேறு பெற்ற Odoardo Focheriniக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம் என்று கூறி இஞ்ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். மனித வாழ்வைத் தனது உயிரினும் மேலாக மதித்த Odoardo Focherini, தனது உயிரைப் பணயம் வைத்து துன்புற்ற யூதர்களின் வாழ்வைக் காப்பாற்றினார் என்ற ...»

|

|

ஈரானில் அரசுத்தலைவர் தேர்தல் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளையில், 6 கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டு, கிறிஸ்தவத்தைப் பரப்பினார்கள் என்றகுற்றச்சாட்டின்பேரில் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளார்கள். Mohabat ஈரானிய கிறிஸ்தவ செய்தி நிறுவனம் வழங்கியுள்ள தகவலின்படி, ஒரு வீட்டினுள் கூடி மத வழிபாடு நடத்தியதாகவும், கிறிஸ்தவத்தைப் பரப்பியதாகவும், வெளிநாட்டு மறைபோதகர்களுடன் தொடர்புக் கொண்டிருந்ததாகவும், நாட்டிற்க ...» |

ஜூன்,17,2013. அனைத்துவிதமான அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளும் தேசிய அளவிலும் அனைத்துலக அளவிலும் எடுக்கப்படும்போது, மனிதனின் முக்கியத்துவம், குறிப்பாக, ஏழைகளுக்குரிய முக்கியத்துவம் வலியுறுத்தப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். இத்திங்களும் செவ்வாயும் வட அயர்லாந்தின் Lough Erne எனுமிடத்தில் இடம்பெறும் G8 நாடுகளின் கூட்டத்திற்கு என, அதன் தற்போதைய தலைவர ...» |

ஜூன்,17,2013. எகிப்தில் கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியத்தை எரித்த இஸ்லாமிய மதபோதகரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்துபவருமான அபு இஸ்லாமுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்துக்கு எதிரான வீடியோ ஒன்று, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டிருந்ததை எதிர்த்து, கெய்ரோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக நடந்த ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமை ஏற்றிருந்தவர் அபு இஸ்லாம் என்பத ...» |

ஜூன்,15,2013. உலகை இன்னும் அமைதியான இடமாக அமைப்பதற்குச் செபமும் ஒன்றிப்பும் இரு தூண்களாக உள்ளன என்று திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran கூறினார். பிரிட்டனுக்கு ஆறு நாள்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள கர்தினால் Tauran இவ்வெள்ளிக்கிழமையன்று இலண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலய அறையில் உலகின் பெரிய மதங்களின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து உலக அமைதிக்காகச் செபித்தார். அனைவரும ...» |

நைஜீரியாவின் வடமாநிலங்களில் ஒன்றான Bornoவில் நான்கு கிறிஸ்தவ கோவில்கள் இஸ்லாமிய குமபல் ஒன்றால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. இஸ்லாமியர்களின் Boko Haram என்ற அடிப்படைவாதக் குழுவால் இது ஆற்றப்பட்டிருக்கலாம் என தன் சந்தேகத்தை வெளியிட்டுள்ளார் நைஜீரிய ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Ignatius Ayau Kaigama. ஆயுதம் தாங்கிய இக்கும்பல், கை வெடிகுண்டுகளை வீசி 4 கோவில்களை தீயிட்டு சேதப்படுத்தியுள்ளதுடன் ...» |

ஜூன்,14,2013. எல்லைகளின் மனிதர்களாகிய ஊடகவியலாளர் சுவர்களை அல்ல, மாறாக, திறந்த மனத்தோடும் இதயத்தோடும் பாலங்களைக் கட்டி எழுப்ப வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். மாதம் இருமுறை வெளியாகும் “La Civiltà Cattolica” என்ற இயேசு சபையினரின் இத்தாலிய இதழின் பணியாளர்கள் முப்பது பேரை இவ்வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், இந்தக் கத்தோதலிக்க இதழின் 163 ஆண்டுகா ...» |

ஜூன்,13,2013. சுவிட்சர்லாந்தில் ஜூன் 13, இவ்வியாழன் முதல் 16ம் தேதி ஞாயிறு முடிய நடைபெறும் பிரம்மாண்ட ஓவியக் கண்காட்சியில் உலகின் ஐந்து கண்டங்களிலிருந்தும் வந்துள்ள ஓவியர்கள் 300 ஓவிய அரங்குகளை உருவாகியுள்ளனர். இந்தப் போட்டியில் கலந்துகொள்ள 39 நாடுகளிலிருந்தும் போட்டியாளர்கள் வந்துள்ளனர். ஜெர்மனியிலிருந்து 60 பேரும், இலண்டனிலிருந்து 40 பேரும், அமெரிக்காவிலிருந்து 90 பேரும் வந்துள்ளனர். சுவிட்சர்லாந் ...» |

ஜூன்,12,2013. மக்கள் நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீடப் பேராயத்தின் தலைவராகிய கர்தினால் Fernando Filoni அவர்கள், ஜூன் 11, இச்செவ்வாய் முதல் இச்சனிக்கிழமை முடிய UAE எனப்படும் ஒன்றிணைந்த அரேபிய அரசு நாடுகளில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்கிறார். அந்நாடுகளில் வாழும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும், ஏனைய மதத்தவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அன்பையும் அக்கறையையும் கர்தினால் Filoni சுமந்த ...» |

ஜூன்,12,2013. பகைமையை வளர்ப்பதற்குப் பதிலாக, ஒன்றிப்பை வளர்க்கும் முயற்சிகளில் குடும்பங்கள் ஈடுபட்டால்தான் மனித சமுதாயத்தில் நிலையான அமைதி உருவாகும் என்று மெக்சிகோ நாட்டு கர்தினால் Norbeto Carrera கூறினார். தனி மனிதர்கள் தங்களிடம் உள்ள ஆயுதங்களை தாங்களாகவே முன்வந்து அரசிடம் ஒப்படைக்கும் ஒரு முயற்சி மெக்சிகோ நகரின் பேராலயத்தில் இத்திங்களன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய மெக்சிகோ கர்தினால ...» |
|

|
|
| நடப்புச் செய்திகள்.................... |
|

காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்க தங்களால் ஆன உதவிகளை வழங்கும் நோக்கில் மிசோரம் கத்தோலிக்கத் திருஅவை, மூங்கில்களால் சவப்பெட்டிகளைத் தயாரிக்கத் துவங்கியுள்ளது. இறந்தோரை அடக்கம் செய்ய சவப்பெட்டிகளைத் தயாரிக்கும் பணியில் மரங்கள் பயன்படுத்தப்படுவதைக ...» |

ஜூன் 18,2013. வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2012ல் 4.5 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா, இலங்கை மற்றும் மலேசியாவுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கர்களே இந்தியாவிற்கு அதிகம் வருவதா ...» |

ஜூன்,14,2013. 720 கோடியாக இருக்கும் தற்போதைய உலக மக்கள் தொகை அடுத்த 12 ஆண்டுகளில் மேலும் 100 கோடியாக உயரும், இவ்வெண்ணிக்கை 2050ம் ஆண்டில் 960 கோடியை எட்டும் என, ஐக்கிய நாடுகள் நிறுவனம் இவ்வியாழனன்று வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. உலக மக்கள் தொக ...» |

ஜூன்,14,2013. அமைதியை ஏற்படுத்துவதற்குப் பரிவிரக்கம் இன்றியமையாதது என்று திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, இலண்டன் இந்து சமய வல்லுனர்களிடம் கூறினார். பிரிட்டனில் இப்புதன் முதல் ஐந்து நாள்கள் சுற்றுப்பயணத்த ...» |

ஜூன்,13,2013. டில்லி உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராகப் பணியாற்றி வரும் ஆயர் Franco Mulakkal அவர்களை ஜலந்தர் மறைமாவட்டத்தின் ஆயராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று நியமித்தார். ஜலந்தர் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிய Anil Joseph Thoma ...» |

ஜூன் 18,2013. அதிகளவில் மாசடைந்த வாயுவை சுவாசிக்க நேரிடுகின்ற கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகள் ஆட்டிஸம் எனும் மன வளர்ச்சிக் குறைபாடு நோயினால் பாதிக்கப்படும் அபாயம் பெருமளவில் உள்ளதாக அமெரிக்காவில் நடந்த ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இப்பெண்களின ...» |

|
ஜூன்,17,2013. சங்க இலக்கியத்திலுள்ள பதினெட்டு நூல்களில், பன்னிரெண்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதற்காக தமிழகத்தின் தூத்துக்குடியைச் சேர்ந்தவரும் தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருபவருமான வைதேகி ஹெர்பர்ட் அவர்களுக்கு கனடாவின் டொரான்ட ...» |

ஜூன்,17,2013. மருந்து, பெட்ரோல் உள்ளிட்டவைகளின் சக்தியை அதிகரிக்கும், "வீரிய ஊக்கி'யைக் கண்டுபிடித்துள்ளார் தேனியை சேர்ந்த, கால்நடை அரசு மருத்துவர் உமாகாந்தன். "நிம்பின்' என்ற வேதிப்பொருள் மூலம், "ஆன்டிபயாடிக்' தன்மையை, வேப்பமரம் அதிகரிக்கச் செய்த ...» |

ஜூன்,15,2013. ஒரு நாளைக்கு 75 ஆயிரம் குழந்தைகள் வீதம் பிறக்கும் இந்தியா, 2030ம் ஆண்டுக்குள் உலகில் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் நாடாக அமையக்கூடும் என்று ஐ.நா. கணித்துள்ளது. தற்போது 120 கோடி மக்களைக் கொண்டிருக்கும் இந்தியாவின் மக்கள் தொக ...» |

ஜூன்,15,2013. தரமான கல்வியை வழங்குவதன்மூலம் இனவெறி, மொழிவெறி மற்றும் பிற பாகுபாடுகளைக் களைய முடியும் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் வல்லுனர் ஒருவர் பரிந்துரைத்துள்ளார். புதிய விழுமியங்களையும் புதிய எண்ணங்களையும் ஊட்டுவதில் கல்விக்கு மையப்பங்க ...» |






|
|