2015-02-11 16:31:00

இலங்கையில் நடந்தது இனஅழிப்பே : வடமாநில அவை தீர்மானம்


பிப்.11,2015 இலங்கையில் நடைபெற்றது இனஅழிப்பே என்கிற தீர்மானம், இலங்கையின் வடமாநில அவையில் வாதங்களுக்கு உட்பட்டிருந்த நிலையில், இச்செவ்வாயன்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை, அவையில் சமர்ப்பித்த முதலமைச்சர், அது குறித்து தமிழில் விடேச அறிக்கையொன்றை வாசித்ததுடன், நீண்ட விளக்கம் ஒன்றை ஆங்கில மொழியில் வழங்கினார்.

சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்; ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான அறிக்கை திட்டமிட்டபடி வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையே என்பதால் அந்த்த் தீர்மானத்தைத் தள்ளிப்போடக் கூடாது என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம், உண்மையை உலகிற்கு உணர்த்தும் என்றும், உள்நாட்டு மக்களின் வெறியால் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை உலகத்திற்கு எடுத்துரைக்கும் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் அவையில் தெரிவித்துள்ளார். 

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.