2015-02-23 16:23:00

மலேசிய கிறிஸ்தவர்களின் எருசலேம் திருப்பயணத்திற்கு தடை


பிப்.23,2015. மத்தியக்கிழக்குப்பகுதியின் பாதுகாப்புப் பிரச்சனைகளைக் காரணம்காட்டி, மலேசியக் கிறிஸ்தவர்கள், எருசலேம் மற்றும் பாலஸ்தீனப்பகுதிகளுக்கு திருப்பயணம் மேற்கொள்வதற்கு தடைவிதித்துள்ளது மலேசிய அரசு.

இஸ்ராயேல், பாலஸ்தீன மோதல்களினால் எழுந்துள்ள பதட்ட நிலைகளையொட்டி, அனைத்து பயண முன் அனுமதிகளும் தற்போது நீக்கப்பட்டு, பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக மலேசியாவின் துணை உள்துறை அமைச்சர் Wan Junaidi Jaafar உரைத்தார்.

பணக்கார மலேசியர்களைக் கடத்திச்செல்ல தீவிரவாத குழு ஒன்று திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளதாக மலேசிய உள்துறை அமைச்சர் Ahmad Zahid Hamidi ஏற்கனவே கடந்த வாரத்தில் அறிவித்திருந்தார்.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.