2015-03-11 17:01:00

ISIS பிடியிலிருந்து மக்களைக் காக்கவேண்டும், முதுபெரும் தந்தை


மார்ச்,11,2015. மனிதர்கள், கட்டிடங்கள், கலாச்சாரம் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்திவரும் இஸ்லாமியத் தீவிரவாதத்திலிருந்து அப்பாவி மக்களைக் காக்கும்படி, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, முதலாம் இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் வான்படைத் தாக்குதல்களின் உதவியோடு, குர்த் இனத்தவரின் படைகள் ISIS தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால், அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் துன்புறுகின்றனர் என்று முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.

மனிதகுலத்திற்கு ஏற்பட்டுள்ள இந்தப் பெரும் துயரைக் கண்டும் காணாததுபோல் இருக்க முடியாது என்றும், அகில உலக சமுதாயம் மக்களைக் காக்கும் பணியில் உடனடியாக ஈடுபடவேண்டும் என்றும் ஈராக் ஆயர்கள் பேரவைத் தலைவரான முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.