2015-03-26 16:36:00

வங்காளத்தில், கத்தோலிக்கப் பள்ளிக்கு மிரட்டல் கடிதம்


மார்ச்,26,2015. பயனுள்ளவர்கள், பயனற்றவர்கள் என்ற அடிப்படையில், வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் நோயுற்றோர், வறியோர் ஆகியோரை மனித சமுதாயத்திலிருந்து நீக்கும் முயற்சிகள் கண்டனத்திற்கு உரியவை என்று மும்பை ஆயர் ஒருவர் கூறினார்.

மார்ச் 25, இப்புதனன்று கொண்டாடப்பட்ட ஆண்டவர் பிறப்பின் அறிவிப்புப் பெருவிழாவை, வாழ்வுக்கு ஆதாரம் தரும் நாளாக இந்தியத் தலத்திருஅவை சிறப்பித்ததையொட்டி, திருப்பலியாற்றிய மும்பை துணை ஆயர், Dominic Savio Fernandes அவர்கள், இவ்வாறு தன் மறையுரையில் கூறினார்.

தாயின் கருவில் தோன்றும் ஒவ்வொரு உயிரும் இறைவனின் சாயலைத் தாங்கியுள்ளது என்று கூறிய ஆயர் Fernandes அவர்கள், கருவிலிருந்து கல்லறை முடிய ஒவ்வொரு உயிரையும் மதிக்கும்போது, இறைவனையே மதிப்பதற்குச் சமம் என்று எடுத்துரைத்தார்.

இதற்கிடையே, வங்காளத்தில் பணியாற்றிவரும் ஒரு கத்தோலிக்கப் பள்ளி தீவைத்துக் கொளுத்தப்படும் என்ற மிரட்டல் கடிதம் வந்துள்ளதென குழந்தை மரியா அருள் சகோதரிகள் சபையைச் சேர்ந்த பள்ளி நிர்வாகி, அருள் சகோதரி Anise Jacob அவர்கள், காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார் என ஆசிய செய்தி கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.