2015-03-27 15:12:00

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்கு முயற்சி


மார்ச்,27,2015. Boko Haram இஸ்லாமியத் தீவிரவாதிகளின் வன்முறைக்குப் பயந்து நாட்டுக்குள்ளேயும், வேறு நாடுகளுக்கும் புலம்பெயரும் மக்களுக்கு உதவும் செயல்திட்டங்களை வகுத்துள்ளது அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம்.

Boko Haram தீவிரவாதிகளால் நைஜீரிய மக்கள் அனுபவிக்கும் அச்சமூட்டும் துன்பங்கள் குறித்தும், கடந்த ஆண்டில் மட்டும் புலம்பெயர்ந்துள்ள பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட நைஜீரிய மக்கள் குறித்தும், உரோம் நகரில் இவ்வெள்ளியன்று நிறைவடைந்த இரண்டு நாள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மத்திய ஆப்ரிக்கக் குடியரசிலிருந்து புலம்பெயர்ந்துள்ள எட்டு இலட்சம் மக்களின் நெருக்கடி நிலைகளும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம் நடத்திய இக்கூட்டத்தில் கேமரூன், நைஜர், சாட் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.