2015-04-24 16:23:00

தொழில்நுட்பத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்பட வலியுறுத்தல்


ஏப்.24,2015. வியக்கத்தக்க வகையில் அதிவேகமாக வளர்ந்துவரும் கணினி மற்றும் தொடர்பு தொழில்நுட்பத் துறை(ICT), ஆர்வத்தைத் தூண்டுகின்ற, முக்கியமான மற்றும் நல்ல ஊதியத்தைக் கொண்ட வேலை வாய்ப்புக்களை வழங்குகின்றது என்று கூறியது அனைத்துலக தொலைத்தொடர்பு கழகம்.

ஏப்ரல் 23, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக கணினி மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்கள் தினத்திற்னெ அறிக்கை வெளியிட்ட அனைத்துலக தொலைத்தொடர்பு கழகமான ITUவின் பொதுச் செயலர் Houlin Zhao அவர்கள், தகவல் தொழில்நுட்பத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படுமாறு கேட்டுக்கொண்டார்.

இத்துறையில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவது குறித்து இவ்வாண்டு உலக தினத்தில் வலியுறுத்தப்பட்டது எனவும் கூறினார் Zhao.

ICT துறையில் சிறுமிகளை அனுமதிப்பது, அவர்கள் தங்களின் படைப்பாற்றலைப் பயன்படுத்தி, பன்னாட்டுச் சூழலில் வேலை செய்யவும், வருங்காலத்தை அமைப்பதில் பங்குகொள்ளவும் உதவும் என்றும், இக்கால வேலைவாய்ப்புகளில் 95 விழுக்காடு டிஜிட்டல் துறையைச் சார்ந்ததாக உள்ளது என்றும் கூறினார் Zhao.

உலக ICT தினம், ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் நான்காவது வியாழனன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.