2015-04-25 15:38:00

Dachau முகாமில் மறைசாட்சிகளான குருக்களுக்கு அஞ்சலி


ஏப்.25,2015. இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியின் Dachau வதைப்போர் முகாமில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான அருள்பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தத் திட்டமிட்டுள்ளது போலந்து தலத்திருஅவை.

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாத்சிகளால் அமைக்கப்பட்ட வதைப்போர் முகாம்களில் முதல் முகாமான Dachau, 1945ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படைகளால் விடுவிக்கப்பட்டது.

இதன் எழுபதாம் ஆண்டு நிறைவு நினைவுகளைக் கடைப்பிடிக்கவுள்ள போலந்து தலத்திருஅவை, Dachau முகாம் ஐரோப்பிய அருள்பணியாளர்களின் முக்கிய முகாமாக இருந்தது என்றும், இதில் கைதுசெய்யப்பட்டிருந்த 2,794 அருள்பணியாளர்களுள் 1,777 பேர் போலந்து நாட்டவர் என்றும், இவர்களில் 800க்கும் அதிகமானோர் அம்முகாமில் இறந்தனர் என்றும் கூறியது.

இவர்களில் 46 பேர் மறைசாட்சிகள் என, 1999ம் ஆண்டில் முத்திப்பேறு பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

Dachau வதைப்போர் முகாமில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு இலட்சம் பேரில் 60 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் போலந்து நாட்டவர். 

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.