2015-04-25 15:43:00

தென் சூடானில் சிறார் படை வீரர் விடுதலைக்கு யூனிசெப் பாராட்டு


ஏப்.25,2015. தென் சூடான் புரட்சிப் படைகள் தங்களிடம் கடைசியாக இருந்த 283 சிறார் படை வீரர்களையும், ஐ.நா.வின் யூனிசெப் குழந்தை நல நிறுவனத்திடம் இவ்வெள்ளியன்று ஒப்படைத்துள்ளன.

282 சிறுவர் மற்றும் ஒரு சிறுமி என 283 சிறார் படை வீரர்களை விடுதலை செய்திருப்பதன் மூலம், இவ்வாண்டில் இதுவரை 1,757 சிறார் படை வீரர்களை, தென் சூடான் புரட்சிப் படைகள் விடுதலை செய்துள்ளன.

இச்சிறாரை சமுதாயத்தில் ஒன்றிணைக்கும் நடவடிக்கைக்கு, ஒவ்வொரு சிறாருக்கும் 2,580 டாலர் தேவைப்படுகிறது என யூனிசெப் கணக்கிட்டுள்ளது.

தென் சூடானில் 2013ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கிய சண்டையினால், 2015ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 64 இலட்சம் பேருக்கு உணவுப் பாதுகாப்பு தேவைப்பட்டது என்று ஐ.நா. கூறுகிறது.     

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.