2015-04-29 15:52:00

இனவெறி என்ற நோயைக் குணமாக்கும் ஒரே மருந்து, உண்மை


ஏப்.29,2015. அமெரிக்க ஐக்கியநாட்டுச் சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் இனவெறி என்ற நோயைக் குணமாக்கும் ஒரே மருந்து, உண்மை என்று பால்டிமோர் (Baltimore) பேராயர், வில்லியம் லோரி அவர்கள் கூறியுள்ளார்.

பால்டிமோரில் ஏப்ரல் 12ம் தேதி கைது செய்யப்பட்டு, காவல்துறை கண்காணிப்பில் வைக்கப்பட்ட Freddie Gray என்ற 25 வயது இளைஞர், ஏப்ரல் 19ம் தேதி இறந்ததையடுத்து அந்நகரில் பெருமளவு கலவரங்கள் ஏற்பட்டன.

இந்த மரணம் எவ்வகையில் நிகழ்ந்ததென்ற முழுமையான உண்மை வெளியாகவேண்டும் என்பதை வலியுறுத்தி பால்டிமோர் பேராயர் லோரி அவர்கள் இத்திங்களன்று அறிக்கையொன்றை வெளியிட்டார்.

இளையவர் Freddie பற்றிய முழுமையான உண்மைகள் வெளியாகக் காத்திருக்கும் வேளையில், Freddieஐ இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கு செபங்களைச் சமர்ப்பிப்போம் என்று பேராயரின் அறிக்கை விண்ணப்பித்துள்ளது.

காவல் துறையினர் தங்கள் பணியை பொறுப்புடனும், நேர்மையுடனும் மேற்கொள்வதற்கு நமது தேவை என்பதையும், பேராயர் லோரி அவர்கள் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

 இதற்கிடையே,வெள்ளையினத்தைச் சேர்ந்த காவல் துறையினரால் கறுப்பின மனிதர்கள் பலர், அண்மைய மாதங்களில் கொல்லப்பட்டு வருவதைக் குறித்து இச்செவ்வாயன்று பேசிய அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலைவர், பாரக் ஒபாமா அவர்கள், 'நம் நாடு அழ்ந்ததோர் ஆன்மீகத் தேடலில் ஈடுபடுவது அவசியம்' என்று குறிப்பிட்டார்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.