2015-05-22 15:38:00

தேர்தல் நடைமுறைகளை திருஅவை ஆதரிக்காது, புருண்டி ஆயர்கள்


மே,22,2015. புருண்டி நாட்டுத் தலைநகர் புஜூம்புராவில் பதட்டநிலைகள் உச்சகட்டத்தில் உள்ள இவ்வேளையில், அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடந்தால், அது நியாயமாக, ஒளிவுமறைவில்லாமல், அமைதியான முறையில் நடைபெற வாய்ப்பில்லை என அந்நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.

ஆப்ரிக்க நாடாகிய புருண்டியின் தற்போதைய நிலவரம் குறித்து பீதெஸ் செய்தி நிறுவனத்திற்குத் தகவல் அனுப்பியுள்ள ஆயர்கள், நாட்டில் பாதுகாப்பும், சுதந்திரமும் உறுதி செய்யப்படுமாறு அரசை வலுறுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

இம்மாதம் 26ம் தேதி நடைபெறவிருந்த சட்டமன்ற மற்றும் பஞ்சாயத்துத் தேர்தல்கள் வருகிற ஜூன் 5ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அதோடு அரசுத்தலைவர் தேர்தல் ஜூன் 26ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசுத்தலைவர் Pierre Nkurunziza அவர்கள் மூன்றாவது முறையாக பதவியில் அமருவதற்காக நடைபெறவுள்ள தேர்தலை எதிர்த்து அந்நாட்டில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.