2015-07-03 14:45:00

இத்தாலிய அருங்கொடை இயக்கத்தின் 38வது மாநாடு


ஜூலை,03,2015. இத்தாலிய அருங்கொடை இயக்கத்தின் 38வது மாநாடு இவ்வெள்ளியன்று உரோம் நகரில் தொடங்கியுள்ளது.

இவ்வெள்ளி உள்ளூர் நேரம் மாலை 6 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், இவ்வியக்கத்தின் ஏறக்குறைய முப்பதாயிரம் உறுப்பினர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திப்பது இதன் ஒரு நிகழ்வாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் மாலை 4 மணிக்கு இந்நிகழ்வைத் தொடங்கிய இந்த இயக்கத்தினர், ஏறக்குறைய 2 மணி நேரம் செபம், பாடல் மற்றும் சாட்சியப் பகிர்வுகள் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தனர்.

தூய ஆவியாரில் புதுப்பித்தல் என்ற இலக்கைக் கொண்டிருக்கும் இவ்வியக்கத்தினர், ஒன்றிப்பு மற்றும் அமைதியின் வழிகள், இக்காலத்தின் மறைசாட்சிகளுக்காகச் செபம் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆன்மீகம் என்ற தலைப்பில் இந்த 2 நாள் நிகழ்வைச் சிறப்பிக்கின்றனர்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.