2015-08-18 14:36:00

கர்தினால் பாஸ்காய் மறைவுக்கு திருத்தந்தை இரங்கல்


ஆக.18,2015. ஹங்கேரி நாட்டின் எஸ்டர்காம்-புடாபெஸ்ட் உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் கர்தினால் László Paskai அவர்கள் மரணமடைந்ததை முன்னிட்டு தனது இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எஸ்டர்காம்-புடாபெஸ்ட் உயர்மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் Péter Erdő அவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், காலஞ்சென்ற கர்தினால் Paskai அவர்கள், ஹங்கேரி திருஅவைக்கு பல ஆண்டுகள் ஆற்றியுள்ள அரும்பணிகளுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார். மேலும், அவரின் ஆன்மா நிறைசாந்தி அடைய செபிப்பதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த 88 வயது நிரம்பிய கர்தினால் László Paskai அவர்கள் 1979ம் ஆண்டில் Veszprém பேராயராக நியமிக்கப்பட்டார். 1980ம் ஆண்டில் கர்தினாலாக உயர்த்தப்பட்ட இவர், எட்டு ஆண்டுகள் ஹங்கேரி தலத்திருஅவையின் தலைவராகவும், எஸ்டர்காம்-புடாபெஸ்ட் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகவும் பணியாற்றியுள்ளார்.

ஹங்கேரி நாட்டுக் கர்தினால் Paskai அவர்களின் இறப்போடு திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 219 ஆகவும், எண்பது வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 120 ஆகவும் உள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.