2015-08-21 15:29:00

பாகிஸ்தான்-தெய்வநிந்தனை கைதுகளுக்கு மதத் தலைவர்கள் கண்டனம்


ஆக.21,2015. பாகிஸ்தானில் தங்களின் தனிப்பட்ட துண்டு விளம்பரம் ஒன்றில், இறைவாக்கினர் என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்காக, மூன்று கிறிஸ்தவர்களும், ஒரு முஸ்லிமும் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அந்நாட்டு மதத் தலைவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இவ்வெள்ளியன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இறந்த ஒருவருக்கு அஞ்சலி செலுத்தும் துண்டு விளம்பரம் ஒன்றில், இறைவாக்கினர் என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்காக, தெய்வநிந்தனை மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களின்கீழ் இந்த நால்வரும் பஞ்சாப் மாநிலத்தில் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்கைது குறித்து கருத்து தெரிவித்த உள்ளூர் கிறிஸ்தவத் தலைவர் Ahsan Masih Sandu அவர்கள், Aftab Gill என்ற கிறிஸ்தவர், இறந்த தனது தந்தை Fazal Masih அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அச்சிட்ட துண்டு விளம்பரத்தில், விவிலியத்தில் வரும் இறைவாக்கினரைக் குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

இது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த Sandu அவர்கள், முஸ்லிம் சகோதரர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளதாகவும், ஆனால் அது புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.