2015-08-28 15:46:00

திருத்தந்தையின் ஆப்ரிக்கத் திருப்பயணம் குறித்த அறிவிப்பு


ஆக.28,2015. வருகிற நவம்பரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆப்ரிக்காவில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம் குறித்த அதிகாரப்பூர்வமான செய்தி, வருகிற செப்டம்பரில் வெளியிடப்படும் என்று, கென்ய திருப்பீடத்தூதர் பேராயர் சார்லஸ் டானியேல் பால்வோ அவர்கள் கூறினார்.

கென்யா, உகாண்டா, மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆகிய மூன்று நாடுகளுக்கு திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம் குறித்த விபரங்கள், வருகிற அக்டோபரில் வெளியிடப்படும் என்றும் பேராயர் பால்வோ அவர்கள் கூறினார்.

இதற்கிடையே, நைரோபி, Kampala, Bangui ஆகிய தலைநகரங்களுக்கு திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம் குறித்து மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ளார் கென்ய ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Philip Anyolo.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நம் அழைப்பை ஏற்றுள்ளார் என்றும், இப்பயணம் வருகிற நவம்பரில் இடம்பெறும் என்றும் கூறியுள்ள ஆயர் Philip Anyolo அவர்கள், இத்திருத்தூதுப் பயணம், அரசு மற்றும் மேய்ப்புப்பணி பயணமாக அமைகின்றது என்றும் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.