2015-10-27 15:54:00

ஆயர்கள் மாமன்றம் இந்தியத் திருஅவைக்குப் புத்துயிர் அளிக்கும்


அக்.27,2015. கத்தோலிக்கத் திருஅவையில் அண்மையில் நடந்து முடிந்த குடும்பம் பற்றிய 14வது உலக ஆயர்கள் மாமன்றம், இந்தியத் திருஅவைக்குப் புத்துயிர் அளிக்கும் என்று இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Baselios Cleemis அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.

அக்டோபர் 25, இஞ்ஞாயிறன்று வத்திக்கானில் நிறைவடைந்த உலக ஆயர்கள் மாமன்றம் பற்றி கருத்து தெரிவித்த கர்தினால் Cleemis அவர்கள், மாமன்றத் தந்தையரால் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் வெளிவரவிருக்கும் அப்போஸ்தலிக்க அறிவுரையின்படி(Apostolic Exhortation) இந்தியத் திருஅவை குடும்பங்களை உறுதிப்படுத்தும் என்று கூறினார்.

14வது உலக ஆயர்கள் மாமன்றம் நிறைவடைந்த பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கர்தினால் Cleemis அவர்கள், ஏற்கனவே பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் குடும்பங்களை, கருணை மற்றும் பரிவன்புடன் அணுகுவதற்கு இம்மாமன்றத்தில் திறந்த மனது இருந்தது என்று கூறினார்.

இந்தியத் திருஅவையிலிருந்து மூன்று கர்தினால்கள், எட்டு ஆயர்கள் மற்றும் மூன்று பொதுநிலையினர்  14வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்து கொண்டனர். மேலும், இம்மாமன்றத்தில் 55 பொதுநிலையினரும் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : New Indian Express / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.