2015-11-23 16:00:00

பேராயர் மர்கெத்தோவுக்கு திருத்தந்தை வாழ்த்துக் கடிதம்


நவ.23,2015. இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் பொதுச் செயலராகப் பணியாற்றிய கர்தினால் Pericle Felici அவர்களின் பொதுச் சங்க நாள் குறிப்பேட்டை புத்தகமாக வெளியிட்டுள்ள பேராயர் அகுஸ்தினோ மர்கெத்தோ அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து கடிதம் ஒன்றை இத்திங்களன்று அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் பற்றி மிகவும் தரம் மிக்க ஒருவரின் குறிப்புக்களிலிருந்து தயாரிக்கப்பட்டு வெளிவந்துள்ள The Conciliar Diary of Cardinal Pericle Felici என்ற புத்தகம், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் பற்றி ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு பெரிதும் உதவும் என்று குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

தூய ஆவியாரில், கிறிஸ்துவில் இறைவனோடு நட்புறவு கொள்ளும் வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கும், திருஅவை மற்றும் இறைவனின் உன்னத மகிமைக்கும் நாம் ஆற்றும் அன்றாடப் பணிகளைக் கட்டியெழுப்பி பேணிக் காப்பதற்கும் இப்புத்தகம் தனக்கு உதவுகின்றது என்றும் திருத்தந்தையின் கடிதம் கூறுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.