2015-11-23 15:33:00

வட மாநில ஆளுனர், மன்னார் முதன்மைக் குரு சந்திப்பு


நவ.23,2015. இலங்கையின் வட மாநில ஆளுனர் எச்.எம்.ஜி.எஸ்.பலிக்கார அவர்கள்,  மன்னார் மறைமாவட்ட முதன்மைக் குரு விக்டர் சூசை அவர்களை, மன்னார் ஆயர் இல்லத்தில் இத்திங்கள் காலையில் சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது எச்.எம்.ஜி.எஸ்.பலிக்கார அவர்கள், மன்னார் ஆயரின் உடல்நிலை குறித்தும், மன்னாரின் நிலைமைகள் குறித்தும் கேட்டறிந்தார் என்று செய்திகள் கூறுகின்றன.

மேலும்,  மன்னார் மாவட்ட வளர்ச்சி குறித்த மீளாய்வு கூட்டம், வடமாநில ஆளுனர் எச்.எம்.ஜி.எஸ்.பலிக்கார அவர்கள் தலைமையில் இத்திங்கள் காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அச்சமயத்தில், மன்னார் மாவட்டத்தின் மன்னார், மாந்தை மேற்கு, மடு, நானாட்டான், முசலி ஆகிய ஐந்து பகுதிச் செயலாளர்கள் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிகள் தொடர்பாக ஆராயப்பட்டது. குறிப்பாக, சாலை வசதி, நலவாழ்வு, விவசாயம், கல்வி போன்ற விடயங்கள் தொடர்பில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டது. 

ஆதாரம் : Athavan / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.