2016-02-04 15:26:00

நேர்காணல் – உலக புற்றுநோய் தினம் – மருத்துவர் சாகர்,அடையாறு


பிப்.04,2016. பிப்ரவரி 04, இவ்வியாழன் உலக புற்றுநோய் தினம். நம்மால் முடியும், என்னால் முடியும் என்ற மையக்கருத்துடன் இந்த உலக தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இத்தினத்தை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய, அடையாறு புற்றுநோய் மருத்துவமனைத் தலைவர் மருத்துவர் சாந்தா அவர்கள், புகையிலை, மது, தீய கொழுப்பு சத்துள்ள உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, உடல் பருமன், உடல் உழைப்பின்மை, மாசு கலந்த காற்று, சுத்தமின்மை போன்றவைகள்தான் புற்றுநோய்க்கு காரணம். இதைத் தடுத்தால் 40 முதல் 60 விழுக்காட்டுப் புற்றுநோயை தடுக்க முடியும், இந்தியாவில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் நோய் முற்றிய நிலையிலேயே மருத்துவமனைக்கு வருகின்றனர், புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் குணப்படுத்த முடியும், செலவும் குறையும், 2015ம் ஆண்டில் தமிழகத்தில் 56 ஆயிரம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர், உலகில் ஒவ்வோர் ஆண்டும் புற்றுநோயால் 80 இலட்சம் பேர் இறக்கின்றனர் என்று கூறினார். இந்த உலக நாளை முன்னிட்டு, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் சாகர் அவர்களை, வத்திக்கான் வானொலி நேயர்களுக்காகத் தொலைபேசியில் அழைத்துப் பேசினோம்.








All the contents on this site are copyrighted ©.