2016-02-06 16:02:00

கிறிஸ்தவ சபைகளின் உலக பல்சமய நல்லிணக்க வாரம்


பிப்.06,2016. உலக பல்சமய நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு, திருப்பீட பல்சமய அவையின் அதிகாரிகளும், உலக கிறிஸ்தவ மன்றத்தின் பல்சமய அவையின் அதிகாரிகளும், பிப்ரவரி 3, 4 தேதிகளில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் கூட்டம் ஒன்றை நடத்தினர்.

2015ம் ஆண்டில் இவ்விரு அவைகளும் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி ஆய்வு நடத்திய இக்கூட்டத்தினர், 2016ம் ஆண்டில் ஆற்ற வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கலந்து பேசினர்.

பல்சமய உலகில் கிறிஸ்தவ சாட்சியம் என்ற ஏட்டை பிரசுரித்தது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை இவ்விரு அவையினரும் அண்மை ஆண்டுகளாக இணைந்து ஆற்றி வருகின்றனர்.   

ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் வாரம், உலக பல்சமய நல்லிணக்க வாரமாக, ஐ.நா.வால் சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.