2016-02-11 15:57:00

கிறிஸ்தவர்கள், அன்பு செய்வதற்கு அழைக்கப்பட்டுள்ளவர்கள்


பிப்.11,2016. கிறிஸ்தவர்களாகிய நாம் அன்பு செய்வதற்கு அழைக்கப்பட்டுள்ளதால், பாலியல் இன்பங்களைத் தூண்டும் ஆசைகளை வென்று வாழவும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று பிலிப்பைன்ஸ் ஆயர்கள் வெளியிட்டுள்ள தவக்காலச் செய்தியில் கூறியுள்ளனர்.

வலைத்தளங்கள் வழியே பெருகிவரும் பாலியல் தொடர்பான செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளை வன்மையாகக் கண்டித்து, பிலிப்பைன்ஸ் ஆயர் அவையின் தலைவர் பேராயர் சாக்ரடீஸ் வியேகாஸ் அவர்கள் பிப்ரவரி 10, இப்புதனன்று, இச்செய்தியை வெளியிட்டுள்ளார்.

அன்பிற்காக படைக்கப்பட்டுள்ளோம், தூய்மைக்காகவும் படைக்கப்பட்டுள்ளோம் என்ற தலைப்பில் ஆயர்கள் விடுத்துள்ள தவக்காலச் செய்தியில், பிலிப்பைன்ஸ் நாட்டில் பாலியல் வன்மங்களை கட்டுப்பாடின்றி காட்டிவரும் இணையத்தளங்களுக்கு எதிராக போராடும்படி கத்தோலிக்கர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சமுதாயத்தில், குறிப்பாக, இளையோரிடையே பரவியுள்ள இந்த சமுதாயப் புற்றுநோயை உடனடியாகக் களையாவிடில் வருங்காலச் சந்ததி பெரும் ஆபத்தைச் சந்திக்கக் கூடும் என்று ஆயர்கள் தங்கள் செய்தியில் எச்சரித்துள்ளனர்.

ஆதாரம் : CBCP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.