2016-03-02 16:51:00

திருத்தந்தையால் மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் நல்ல மாற்றம்


மார்ச்,02,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம், அந்நாட்டில் நிலையான ஒரு தேர்தலையும், தகுதியான ஒரு தலைவரையும் தந்துள்ளது என்று, மத்திய ஆப்ரிக்கக் குடியரசு ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் தியுதோன்னே இங்சாபலைங்கா (Dieudonne Nzapalainga) அவர்கள் கூறியுள்ளார்.

மத்திய ஆப்ரிக்க குடியரசில் அமைதி கிடைக்கவேண்டும் என்ற வேண்டுதலுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டின் தலைநகர் பாங்கியில் அமைந்துள்ள பேராயலத்தில் புனிதக் கதவுகளைத் திறந்ததை நினைவுகூர்ந்த பேராயர் இங்சாபலைங்கா அவர்கள், நாட்டின் முன்னாள் பிரதமர், Faustin-Archange Touadera அவர்கள் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, நம்பிக்கையைத் தருகிறது என்று கூறினார்.

நடந்து முடிந்த தேர்தல், ஓரளவு அமைதியில் நடைபெற்றதற்கும், நாட்டின் பிரச்சனைகளை நன்கு உணர்ந்த தகுதியான ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பயணம் வித்திட்டது என்று பேராயர் இங்சாபலைங்கா அவர்கள், CNS கத்தோலிக்கச் செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.