2016-03-12 16:46:00

பிரேசில் நாட்டில் இறையியல் பேராசிரியர் கொலை


மார்ச்,12,2016. பிரேசில் நாட்டில், நன்னெறி இறையியல் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற 75 வயது நிரம்பிய அருள் பணியாளர் ஒருவர், அடையாளம் தெரியாத மனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பிரேசில் நாட்டின் பெத்ரோபோலிஸ் (Petropolis) பிரான்சிஸ்கன் இறையியல் நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றபின், கத்தோலிக்க வெளியீட்டுக் கழகத்தின் தலைவராகப் பணியாற்றிவந்த அந்நாட்டு அருள் பணியாளர், அந்தோனியோ மோசெர் (Antonio Moser) அவர்கள், தன் வாகனத்தை ஓட்டிச் சென்றபோது, அவரை, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த இருவர், துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.

பிரான்சிஸ்கன் துறவியான அருள்பணி மோசெர் அவர்களிடம் கொள்ளையடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியின்போது, அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.