2016-03-14 16:59:00

சிரியா நாட்டிற்காக செபிப்பதன் வழியாக ஒருமைப்பாட்டு அறிவிப்பு


மார்ச்,14,2016. இம்மாதம் 15ம் தேதிக்கும் 20ம் தேதிக்கும் இடைப்பட்டக் காலத்தில் சிரியா நாட்டு மக்களுக்காக சிறப்பு செப வழிபாடுகளையும் உண்ணாநோன்புகளையும் மேற்கொள்ளும் அனைத்துலக முயற்சிகளுக்கு தன் ஆதரவை வழங்கியுள்ளது, Pax Christi என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு.

உண்ணா நோன்பு மற்றும் செபவழிபாடுகள் வழியாகவும், நம் அருகே வசிக்கும் சிரியா நாட்டு அகதிகளை நேரில் சந்திப்பதன் வழியாகவும், அவர்களுடன் நம் ஒருமைப்பாட்டை அறிவிக்க முடியும் எனக் கூறும் Pax Christi அமைப்பு, அனைத்து கிறிஸ்தவ கோவில்களிலும், வரும் ஞாயிறு திருப்பலியின்போது சிரியா நாட்டு மக்களுக்காக செபிக்குமாறு விண்ணப்பித்துள்ளது.

குழுவாகவும், தனிப்பட்ட முறையிலும் சிரியா நாட்டிற்காக செபிப்பதன் வழியாக, அந்நாட்டின் அமைதிக்கு நம்மால் உதவ முடியும் எனவும் இந்த கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு, அழைப்பு விடுத்துள்ளது.

ஆதாரம் : ICN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.