2016-03-14 16:46:00

லெபனான் நாட்டு கிறிஸ்தவர்களுக்கு ISIS எச்சரிக்கை


மார்ச்,14,2016. லெபனான் நாட்டு கிறிஸ்தவர்கள், இஸ்லாம் மதத்தைத் தழுவவேண்டும், இல்லையேல் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என ஒரு காணொளி பதிவு வழியே எச்சரித்துள்ளது, ISIS இஸ்லாமிய அரசு.

லெபனான் நாட்டின் Sunni இஸ்லாமியர்கள், அந்நாடு முழுவதும் இஸ்லாமியச் சட்டங்களை நடைமுறைக்குக் கொணரவேண்டும் என்று விண்ணப்பிக்கும் இந்த இஸ்லாமியத் தீவிரவாதக் குழு, லெபனான் நாட்டு கிறிஸ்தவர்கள், இஸ்லாமிய மறையைத் தழுவவேண்டும், இல்லையெனில், அவர்களது பிணங்கள்மீது நடந்து எருசலேம் அடைவோம் என்று தீவிரவாதிகள் கூறியுள்ளனர்.

லெபனான் நாடு, குரானால் வழிநடத்தப்பட வேண்டுமேயொழிய, இஸ்லாமியத்திற்கு எதிரான குற்றவாளிகளால் அல்ல எனவும் கூறுகிறது, ISIS தீவிரவாதிகளின் எச்சரிக்கை காணொளிப் பதிவு.

இதற்கிடையே, அரேபிய ஒன்றியம் (Arab League) மற்றும் அரேபிய வளைகுடா அரசுகள் இணைந்து, எகிப்தின் கெய்ரோவில் மேற்கொண்ட ஒரு கூட்டத்தில், ISIS அமைப்பை ஒரு தீவிரவாதக் குழு என்று அறிவித்து, தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளன. 

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.