2016-03-23 16:18:00

திருமுழுக்குப் பெறவிருப்போரின் எண்ணிக்கை கூடியுள்ளது


மார்ச்,23,2016. இவ்வாண்டு, உயிர்ப்புப் பெருவிழாவன்று, வயது வந்தோர் பலர், திருமுழுக்குப் பெற தீர்மானித்து, அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர் என்று, வசாய் பேராயர், பீலிக்ஸ் மச்சாடோ அவர்கள், ஆசிய செய்தியிடம் கூறினார்.

ஆசிய ஆயர் பேரவையின், பல்சமய உரையாடல் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு பணிக்குழுவின் தலைவரான பேராயர் மச்சாடோ அவர்கள், தன் உயர் மறைமாவட்டத்தில், கிறிஸ்தவர்களாக மாற தீர்மானித்திருப்போரின் எண்ணிக்கை கூடியுள்ளதைக் குறிப்பிட்டுப் பேசினார்.

வயது வந்தவர்கள் மேற்கொள்ளும் இந்த முடிவு, கிறிஸ்துவின் மீது அவர்கள் உணரும் ஆழ்ந்த ஈர்ப்பினால் உருவாகிறது என்றும், வேறு எந்த காரணங்களும் அல்ல என்றும் பேராயர் மச்சாடோ அவர்கள் தெரிவித்தார்.

தாங்கள் பிறந்து வளர்ந்த மதத்தை வெறுத்து இவர்கள் வெளிவரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் மச்சாடோ அவர்கள், கிறிஸ்து என்ற உண்மையில் பொதிந்துள்ள கருவூலங்களை இவர்கள் கண்டுகொண்டதால், அவரைப் பின்பற்ற விழைகின்றனர் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

இறை இரக்கத்தின் தெளிவான வெளிப்பாடாக விளங்கும் கிறிஸ்துவின் முகம், அவரது வாத்தைகள் போன்றவையே தங்களை ஈர்த்துள்ளன என்று கூறும் இவர்களைத் தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்பதையும், பேராயர் மச்சாடோ அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.