2016-03-30 15:37:00

சீனா-உயிர்ப்புப் பெருவிழாவில் 20,000 பேருக்குத் திருமுழுக்கு


மார்ச்,30,2016. சீனாவின் பெய்ஜிங் பேராலயத்தில் கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா திருவிழிப்புத் திருவழிபாட்டில் நூற்றுக்கும் அதிகமான எண்ணிக்கையில், வயது வந்தவர்கள் திருமுழுக்கு பெற்றனர் என்று, ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.

சீனாவில் கிறிஸ்தவர்களாக மாறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்றும், இதை ஒரு புதுமை என்றும், செய்தி வெளியிட்டுள்ள அந்நிறுவனம், உயிர்ப்புப் பெருவிழா திருவிழிப்புத் திருவழிபாட்டில், சீனாவின் மற்ற ஆலயங்களிலும் மக்கள் புதிதாகத் திருமுழுக்குப் பெற்றனர் என்றும் கூறியுள்ளது.   

அண்மை ஆண்டுகளில், இதே உயிர்ப்புப் பெருவிழா திருவழிபாட்டில் இருபதாயிரத்துக்கு அதிகமான மக்கள் புதிதாகத் திருமுழுக்குப் பெற்றுள்ளனர் என்றும் அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அதேபோல், கிறிஸ்மஸ், தூய ஆவியார் பெருவிழா, மரியின் விண்ணேற்பு விழா ஆகிய நாள்களிலும், மக்கள் புதிதாகத் திருமுழுக்குப் பெறுகின்றனர் என்றும், கத்தோலிக்கத் திருஅவையில், ஒவ்வோர் ஆண்டும், ஏறக்குறைய ஒரு இலட்சம் வயது வந்தவர்கள் திருமுழுக்கு பெறுகின்றனர் என்றும் ஆசியச் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : Asianews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.