2016-04-14 16:45:00

இந்திய இயேசு இளையோர் இயக்கத்திற்கு திருப்பீடம் ஒப்புதல்


ஏப்.14,2016. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், கேரளாவில் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது பன்னாட்டுக் கழகமாக இயங்கிவரும், இயேசு இளையோர் (Jesus Youth) இயக்கத்திற்கு, திருப்பீடம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஆசியக் கத்தோலிக்கத் திருஅவையில், இரண்டாவது பெரிய இயக்கமான, இயேசு இளையோர் அமைப்பு, 1980களில் கேரளாவில் தொடங்கப்பட்டு தற்போது 25 நாடுகளில் இயங்கி வருகின்றது.

ஏப்ரல் 20ம் தேதி வத்திக்கானில், திருப்பீடப் பொதுநிலையினர் அவை நடத்தும் நிகழ்வு ஒன்றில், இந்த அமைப்பின் தலைவர் சுபின் ஜேக்கப் அவர்கள், இந்த அனுமதி ஆவணத்தைப் பெற்றுக்கொள்வார்.

இயேசு இளையோர் இயக்கம், ஒரு திருஅவை அமைப்பாக, 2008ம் ஆண்டில், இந்திய ஆயர் பேரவையின் ஒப்புதல் பெற்றது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.