2016-04-22 15:57:00

லாகூருக்கும் டெல்லிக்கும் இடையே அமைதி திருப்பயணம்


ஏப்.22,2016. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே, அமைதி மற்றும் ஒப்புரவை ஊக்குவிக்கும் நோக்கத்தில், தனது உயர்மறைமாவட்டத்தின் 16 அருள்பணியாளர்களுடன் இணைந்து, டெல்லிக்குத் திருப்பயணம் ஒன்றை நடத்தியுள்ளார் பாகிஸ்தானின் லாகூர் பேராயர் செபஸ்தியான் பிரான்சிஸ் ஷா.

இத்திருப்பயணம் பற்றிப் பேசிய பேராயர் ஷா அவர்கள், டெல்லி பேராயர் அவர்களால் தனது குழுவினர் அன்பான வரவேற்பைப் பெற்றனர் என்றும், இவ்விரு நாடுகளின் மக்களிடையே உடன்பிறப்பு மற்றும் ஒன்றிப்புணர்வு வெளிப்பட்டதாகவும் கூறினார்.

கடந்த செவ்வாயன்று லாகூரிலிருந்து 13 மணி நேரம் பேருந்து பயணம் மேற்கொண்டு, டெல்லி வந்தடைந்த அக்குழுவை, டெல்லி பேராயர் அனில் கூட்டோ அவர்கள் அன்பாக வரவேற்றார். இவ்விரு நாட்டினரும், டெல்லி மற்றும் லாகூர் திருஅவைகளின் வரலாறுகள் பற்றிப் பகிர்ந்து கொண்டனர்.

1947ம் ஆண்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் பிரிந்தன.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.