2016-05-25 16:40:00

72 தலித் கிறிஸ்தவர்க்கு விருதுகள்


மே,25,2016. ஓரங்கட்டப்பட்டுள்ள மக்களுக்கு, இந்தியத் திருஅவையில் போதுமான அளவில் உதவிகள் செய்யப்படவில்லை என்று, இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள் கூறினார்.

புதுடெல்லியில், கடந்த திங்களன்று நடைபெற்ற விழா ஒன்றில், 72 தலித் கிறிஸ்தவர்க்கு விருதுகள் வழங்கி அவர்களை ஊக்குவித்து உரையாற்றிய கர்தினால் கிளீமிஸ் அவர்கள், பொருளாதார, சமூக மற்றும் சமயத் துறைகளில், தலித் மக்களுக்குப் போதுமான அளவில் உதவிகள் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

இவ்விழாவில், தலித் கிறிஸ்தவர்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த 72 தலித் கிறிஸ்தவர்க்கு, ஒரு சான்றிதழும், ஒரு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டன.

இவ்விருது பெற்றவரில் ஒருவரான 30 வயது நிரம்பிய ஜூலியஸ், ஆங்கிலம், கணிதம் மற்றும் பிற திறமைகளை வளர்த்துக்கொள்ளும் விதத்தில், தலித் சிறார்க்குப் பயிற்சிகள் வழங்கியவர். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.