2016-06-02 16:51:00

புருண்டி மக்களின் உணவு தேவையை நிறைவேற்ற ஐ.நா. விண்ணப்பம்


ஜூன்,02,2016. ஏறத்தாழ 46 இலட்சம் புருண்டி மக்கள் போதிய உணவின்றி துன்புறுவதாகவும், இதில் 5 இலட்சம் பேருக்கு அவசர கால உணவு உதவிகள் தேவைப்படுவதாகவும் ஐ.நா.வின் உணவு திட்ட நிறுவனமான W.F.P. அறிவித்துள்ளது.

மே மாதம் 30ம் தேதி வரையுள்ள நிலவரப்படி, இரண்டு இலட்சத்து அறுபத்தைந்தாயிரம் புருண்டி மக்கள், தங்கள் அண்மை நாடுகளான காங்கோ குடியரசு, ருவாண்டா, தன்சானியா, உகாண்டா, மற்றும், தூரத்திலுள்ள ஸ்சாம்பியாவிற்குள்ளும் குடியேறியுள்ளதாக உரைக்கும் W.F.P. அமைப்பு, தற்போதும் புருண்டியிலிருந்து ஒரு வாரத்திற்கு ஆயிரம் பேர் வரை வெளியேறி வருவதாகத் தெரிவிக்கிறது.

அண்மை நாடுகளில் வாழும் புருண்டி அகதிகளுக்கு அடுத்த 6 மாதங்களுக்கான அடிப்படைத் தேவைகளைக் கவனிக்க, 5கோடியே 70 இலட்சம் டாலர்கள் தேவைப்படுவதாகவும் இந்த ஐ.நா. அமைப்பு அறிவித்துள்ளது. 

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.