2016-06-08 17:56:00

சீரோ மலபார் திருஅவையில் முதல் திருமணமான தியாக்கோன்


ஜூன்,08,2016. சீரோ மலபார் வழிபாட்டுமுறை திருஅவையில் முதல் முறையாக, திருமணமான ஒருவரை, நிரந்தரத் தியாக்கோனாக அங்கீகரித்துள்ளார் திருஅவைத் தலைவர் கர்தினால் ஜார்ஜ் அலஞ்சேரி. நான்கு குழந்தைகளுக்குத் தந்தையாகிய ஜாய்ஸ் ஜேம்ஸ் என்பவர், இத்திங்களன்று நடைபெற்ற திருவழிபாட்டில் நிரந்தரத் தியாக்கோனாக உயர்த்தப்பட்டுள்ளார்.

ஜாய்ஸ் ஜேம்ஸ் அவர்கள், இந்தியாவிலும், இலண்டனிலும் ஐந்து ஆண்டுகள் குருத்துவப் படிப்பை முடித்துள்ளார். இவர், உஜ்ஜய்ன் சீரோ மலபார் திருவையில் பணியாற்றுவார்.

சீரோ மலபார் திருஅவையில், இதற்கு முன்னதாக, பொதுநிலையினர் நிரந்தரத் தியாக்கோன்களாக அங்கீகாரம் பெற்றிருந்த போதிலும், இத்திருஅவை, தனிப்பட்ட திருஅவையாக மாறிய பின்னர், திருமணமான ஒருவர் நிரந்தரத் தியாக்கோனாக மாறியிருப்பது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகின்றது. இதனை ஒரு வரலாற்று நிகழ்வாகவும் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

ஆதாரம் : New Indian Express / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.