2016-07-09 15:36:00

சட்டவிரோத மீன்பிடித் தொழிலால் 2,300 கோடி டாலர் இழப்பு


ஜூலை,09,2016. உலக அளவில் சட்டத்துக்குப் புறம்பே இடம்பெறும் மீன்பிடித் தொழில், சிறாரின் வருங்காலத்திற்கு அச்சுறுத்தலை முன்வைத்துள்ளது என்று, இவ்வெள்ளியன்று வெளியான ஓர் அறிக்கை கூறுகிறது.

உலக அளவில் சட்டவிரோத மீன்பிடித் தொழில், மிகப்பெரும் தொழிலாக நடந்துவரும்வேளை, இது, உலகப் பொருளாதாரத்தில் ஆண்டுக்கு ஏறக்குறைய 2,300 கோடி டாலர் இழப்பு ஏற்படுத்துவதாக ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் மதிப்பிட்டிருக்கிறது.

உலகிலேயே மேற்கு ஆப்ரிக்கக் கடலில்தான் அதிகபட்ச சட்டவிரோத மீன்பிடித்தல் நடக்கிறது எனவும், அப்பகுதியில்தான், உலகின் ஏழை நாடுகளும் இருக்கின்றன எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.

சட்டத்துக்குப் புறம்பே இடம்பெறும் மீன்பிடித் தொழிலை எதிர்க்கத் தேவையான உள்கட்டமைப்புக்கள் இந்த வறிய நாடுகளிடம் போதிய அளவு இல்லை என்பதால், அந்நாடுகளின் மீனவச் சமூகங்கள் பாதிக்கப்பட்டு வறுமையில் தள்ளப்படுகின்றன எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : BBC/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.