2016-07-25 16:01:00

இளையோரே, உங்களின் கிரக்கோவ் பயணங்களை ஆசீர்வதிக்கிறேன்


ஜூலை,25,2016. “அன்பு இளையோரே, கிரக்கோவ் நோக்கிய உங்கள் பயணங்களை ஆசீர்வதிக்கிறேன், ஏனென்றால், அவை, விசுவாசமும், உடன்பிறப்பு உணர்வும் கொண்ட ஒரு திருப்பயணம்” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இத்திங்களன்று வெளியாயின.

மேலும், போலந்தின் கிரக்கோவ் நகரில் இத்திங்களன்று தொடங்கியுள்ள, ‘Laudato Si’ என்ற சுற்றுச்சூழல் குறித்த கருத்தரங்கிற்குத் தனது வாழ்த்துச் செய்தியையும் அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனித சமுதாயத்தின் பயணத்தில் தொடர்ந்து இடம்பெறும் அழிவுகள் மற்றும் மரணத்தின் அடையாளங்களைக் கூர்ந்து கவனிக்கவும், அவற்றை உற்றுக் கேட்கவும் தயாராக இருங்கள் என்று, இதில் கலந்துகொள்ளும் இளையோருக்கு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை.

கிரக்கோவ் பேராயர் கர்தினால் ஸ்தனிஸ்லாவ் ஜீவிட்ஸ் (Stanisław Dziwisz) அவர்களின் முயற்சியால் நடைபெறும் இக்கருத்தரங்கிற்கு, திருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இச்செய்தியை அனுப்பியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.