செப்.01,2016. ஆஸ்திரேலியாவில், பார்வையற்றோர் அல்லது பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் வகையில், புதிய பணத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
சிட்னியைச் சேர்ந்த கனார் மெக்லெட் என்ற 15 வயது நிரம்பிய, பிறவியிலேயே பார்வையற்ற சிறுவன் தொடங்கிய இயக்கத்தால், இந்த புதிய பணத்தாள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது; பார்வையற்றோர் தொட்டு உணரக்கூடிய வங்கி நோட்டுகள் வேண்டுமென்று இணையத்தில் மனு ஒன்றை அச்சிறுவன் தொடங்கினான்; 56 ஆயிரம் பேர் அதற்கு ஆதரவளித்தனர்.
இந்த புதிய ஐந்து டாலர் மதிப்புள்ள நோட்டுகள், உயர்த்தப்பட்ட அளவில், இரண்டு புள்ளிகளைக் கொண்டுள்ளது; எதிர்காலத்தில் பிற டாலர் நோட்டுகளில் அதை புரிந்துக் கொள்ளத்தக்க வெவ்வேறு எண்ணிக்கையில் புள்ளிகள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில், ஏறத்தாழ மூன்று இலட்சத்து அறுபதாயிரம் பார்வையற்றோர் அல்லது பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் உள்ளனர் என ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |