2016-09-04 14:14:00

திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரை


செப்.04,2016. அன்னை தெரேசா அவர்களின் புனிதர் பட்டமளிப்புத் திருப்பலியில் கலந்துகொண்ட அனைத்து அதிகாரிகளுக்கும், குறிப்பாக, இந்தப் புதிய புனிதரோடு தொடர்புகொண்ட நாடுகளின் அதிகாரிகளுக்கும் நன்றி. உங்கள் நாடுகளை இறைவன் ஆசீர்வதிப்பாராக. இரக்கத்தின் மற்றும் தன்னார்வப் பணியாளர்களுக்கும், எல்லா விசுவாசிகளுக்கும், குறிப்பாக, அன்னை தெரேசாவின் இருபால் பிறரன்பு மறைப்பணியாளர்கள் ஆன்மீகக் குடும்பத்தினருக்கும் நன்றி. இவ்வேளையில், இன்னலும், ஆபத்தும் நிறைந்த சூழல்களில் பணியாற்றும் சகோதரர்களை, சிறப்பாக, தங்களின் வாழ்வை இழக்கும் அருள்சகோதரிகளை நினைக்கின்றேன். இரண்டு நாள்களுக்கு முன்னர், ஹெய்ட்டி தலைநகரில் கொல்லப்பட்ட இஸ்பானிய அருள்சகோதரி இசபெல்லா அவர்களுக்காகச் செபிப்போம். அண்மை நாள்களில் பிற நாடுகளிலும் வன்முறையை எதிர்நோக்கிய அருள்சகோதரிகளையும் நினைப்போம் என்றார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.