2016-09-13 16:49:00

திருமணம் என்பதன் உண்மைத்தன்மையை மறுக்கவோ, இழக்கவோ முடியாது


செப்.13,2016. குடும்பத்திற்கு ஆதரவாக மெக்சிக்கோவின் 125 நகர்களில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அமைதி ஊர்வலம் நடத்தியது, குடும்பம் என்ற அமைப்பிற்கு மக்கள் வழங்கும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது என்றனர் தலத் திருஅவை அதிகாரிகள்.

ஒரு குடும்பத்தின் அடிப்படை அல்லது துவக்கம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உருவாகும் திருமண ஒப்பந்தம் என்பதை உறுதிச் செய்ய முயலும் திருஅவை, ஒரே பாலின நடவடிக்கையாளர்களுக்கு எதிராக செல்கிறது என்று தவறான அர்த்தம் கொள்ளக்கூடாது என்றார், அந்நாட்டின்  Zacatecas  ஆயர் Sigifredo Noriega Barcelo.

ஒரே பாலின நடவடிக்கையாளர்களின் உரிமைகள் மதிக்கப்படுகின்றன, ஆனால், அதற்காக, திருமணம் என்பதன் உண்மைத் தன்மையை மறுக்கவோ, இழக்கவோ முடியாது எனவும் கூறினார், ஆயர் Barcelo.

மெக்சிகோ ஆயர், Pietro Pablo Elizondo அவர்களின் கூற்றுப்படி, மெக்சிக்கோவின் 75 விழுக்காட்டு மக்களுக்கு, குடும்பமே முதன்மை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஆதாரம் : FIDES/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.