2016-09-14 17:39:00

'அணு ஆயுதங்கள் வேண்டாம்' - தென் கொரிய ஆயர்கள்


செப்.14,2016. 'அணு ஆயுதங்கள் வேண்டாம்' என்ற விண்ணப்பத்தை, தென் கொரிய ஆயர்கள், தங்கள் அரசுக்கும், வட கொரிய அரசுக்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுக்கும் விடுத்துள்ளனர் என்று ஆசிய செய்தி கூறுகிறது.

நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில், அணு ஆயுதங்களை உருவாக்குவதும், அவற்றைப் பரிசோதனை செய்து பார்ப்பதும் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆபத்தாக முடியும் என்று, தென் கொரிய ஆயர்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

வட, மற்றும், தென் கொரிய அரசுகளும், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசும், அணு ஆயுத சோதனைகளை நடத்துவது, ஆசிய கண்டத்தில் அணு ஆயுதங்களைக் குவிப்பதற்கு ஒரு வாய்ப்பாக மாறிவிடும் ஆபத்து உள்ளது என்று ஆயர்களின் விண்ணப்பம் கவலை வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தின் 11ம் தேதி என்ற துன்பம் நிறைந்த நாளின் 15ம் ஆண்டு நிறைவு, வன்முறையால் நிகழக்கூடிய அழிவுகளை நமக்கு நினைவுறுத்தியுள்ளது என்று, ஆயர்களின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.