2016-09-19 17:37:00

பிலிப்பீன்ஸ் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு திருஅவை முழு ஆதரவு


செப்.19,2016. பிலிப்பீன்சில் புரட்சிக் குழுக்களுக்கும் அரசுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுக்கு தாங்கள் எப்போதும் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஆயர்கள் அறிவித்துள்ளனர்.

அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க அழைக்கப்பட்டால், தாங்கள் உதவிக்கரம் நீட்ட தயாராக இருப்பதாகக் கூறினார், அந்நாட்டு பேராயர் Fernando Capalla.

பிலிப்பீன்சில் பல ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் MORO இஸ்லாமிய விடுதலை முன்னணி, மற்றும், தேசிய ஜனநாயக முன்னணி என்ற குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் அரசு, இந்த பேச்சுவார்த்தைகளில் திருஅவையின் பங்களிப்பு குறித்து ஆயர்களுடன் விவாதிக்கப்படும் என ஏற்கனவே அறிவித்துள்ளது.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.