2016-09-24 17:30:00

மெக்சிகோவில் அருள்பணியாளர் கடத்தப்படுவது குறித்து கர்தினால்


செப்.24,2016. மெக்சிகோவில் இரு அருள்பணியாளர்கள் அண்மையில் கடத்தப்ப்பட்டு கொலைச் செய்யப்பட்ட அதே திங்கள்கிழமையன்று, மற்றொரு அருள்பணியாளர் கடத்தப்பட்டுள்ளது குறித்து, தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார், அந்நாட்டு கர்தினால் Alberto Suárez Inda. 

Veracruz மாநிலத்திலிருந்து கடந்த ஞாயிறன்று கடத்தப்பட்டு, கொலைசெய்யப்பட்ட இரு அருள்பணியாளர்களின் உடல்கள், மறு நாள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், Michoacan மாநிலத்திலிருந்து கடத்திச்செல்லப்பட்டுள்ள மற்றொரு அருள்பணியாளரைக் குறித்து இதுவரை எவ்வித தகவலும் கிட்டவில்லை என்ற கவலையை வெளியிட்டார், கர்தினால் Suárez Inda.

அருள்பணியாளர் Jose Alfredo Lopez Guillen அவர்கள் கடத்தப்பட்டுள்ளதோடு, அவர் வீட்டிலிருந்து பல பொருட்கள் திருடப்பட்டுள்ளன. 

இந்த அருள்பணியாளரின் விடுதலைக்காக, கர்தினால் Suárez Inda அவர்களுடன் இணைந்து, மெக்சிகோ ஆயர் பேரவையும் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

ஆதாரம்: Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.