2016-10-03 16:43:00

2வது இந்தோனேசிய இளையோர் நாள் நிகழ்வுகள்


அக்.03,2016. இந்தோனேசியாவின், மனாடோ மறைமாவட்டத்தில், அக்டோபர் 1, இச்சனிக்கிழமை முதல், 6ம் தேதி வருகிற வியாழன் முடிய 2வது இந்தோனேசிய இளையோர் நாள் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

"இந்தோனேசியாவின் பன்முகச் சமுதாயத்தில், நற்செய்தியின் மகிழ்வு" என்ற மையக்கருத்துடன் நடைபெறும் இந்த நிகழ்வில், இந்நாட்டின் 37 மறைமாவட்டங்களைச் சேர்ந்த 2600க்கும் அதிகமான இளையோர் கலந்துகொள்கின்றனர்.

வெளியூர்களிலிருந்து வருகை தந்திருக்கும் இளையோர், மனாடோ மறைமாவட்டத்தைச் சேர்ந்த பல கத்தோலிக்கர்களின் இல்லங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும், ஒரு சிலர், ஏனைய கிறிஸ்தவர்கள் மற்றும், இஸ்லாமியரின் இல்லங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மதத்தினரின் இல்லங்களில் தங்கியிருப்பது ஒரு புதிய அனுபவம் என்றாலும், இத்தகைய ஏற்பாடு, மற்ற மதத்தவரை மரியாதையோடு அணுகுவதற்கு இளையோரைத் தயார் செய்கிறது என்று, இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்வோர் கூறியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.