2016-10-06 15:08:00

2018ல் இளையோரை மையப்படுத்தி உலக ஆயர்களின் மாமன்றம்


அக்.06,2016. 2018ம் ஆண்டு, அக்டோபர் மாதம், உலக ஆயர்களின் 15வது மாமன்றம் வத்திக்கானில் நடைபெறும் என்றும், இந்த மாமன்றத்தில் இளையோரை மையப்படுத்தி கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று அறிவித்துள்ளார்.

"இளையோர், நம்பிக்கையும், அழைத்தலைத் தேர்ந்து தெளிதலும்" என்பது, ஆயர் மாமன்றத்தின் மையக் கருத்தாக அமையும் என்றும், உலகின் ஆயர் பேரவைகள், கீழை வழிபாட்டு முறை தலத்திருஅவைகள், துறவு சபைகளின் உலகத் தலைவர்களின் ஒன்றியம் ஆகிய அனைத்தையும் கலந்துபேசி, இந்த மையக் கருத்து தெரிவு செய்யப்பட்டுள்ளது என்றும் திருத்தந்தை அறிவித்துள்ளார்.

திருஅவையின் மேய்ப்புப்பணியில் குடும்பங்கள் மையமாக அமையவேண்டும் என்ற கருத்துடன், உலக ஆயர்களின் 14வது மாமன்றம் நடைபெற்றதைத் தொடர்ந்து, கத்தோலிக்கத் திருஅவை, இளையோருடன் பயணம் செய்யவேண்டும் என்ற கருத்தில் அடுத்த மாமன்ற கருத்து தெரிவு செய்யப்பட்டுள்ளது என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.