2016-10-07 15:58:00

லெபனானில் கர்தினால் சாந்திரியின் மேய்ப்புப்பணி பயணம்


அக்.07,2016. அக்டோபர் 7, இவ்வெள்ளி முதல், 10, வருகிற திங்கள் வரை, கீழை வழிபாட்டு முறை பேராயத்தின் தலைவர், கர்தினால் லியோனார்தோ சாந்திரி அவர்கள், லெபனான் நாட்டில் மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இவ்வெள்ளியன்று லெபனான் நாட்டை அடைந்ததும், பெய்ரூட் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு தேசிய கண்காட்சியைத் திறந்துவைக்கும் விழாவில் கலந்துகொண்ட கர்தினால் சாந்திரி அவர்கள், மாரனைட் வழிபாட்டு முறை முதுபெரும்தந்தை கர்தினால் பெக்காரோ புத்ரோஸ் ராஹி அவர்களையும் சந்தித்தார்.

பெய்ரூட்டின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக புதிதாக நியமனம் பெற்றுள்ள César Essayan அவர்களை, அக்டோபர் 8, இச்சனிக்கிழமை, பெய்ரூட் பேராலயத்தில், கர்தினால் சாந்திரி அவர்கள், பேராயராகத் திருநிலைப்படுத்துகிறார்.

அக்டோபர் 9, இஞ்ஞாயிறன்று, Order of Malta என்ற அமைப்பினர் நடத்திவரும் புலம்பெயர்ந்தோர் முகாம்களை பார்வையிடும் கர்தினால் சாந்திரி அவர்கள், அந்த முகாமில் கட்டப்பட்டுள்ள ஓர் ஆலயத்தையும் அர்ச்சிப்பார் என்று, கீழை வழிபாட்டு முறை பேராயம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.