2016-10-17 16:45:00

சிறைச்சாலை நிலைகுறித்து வெனிசுவேலா ஆயர்கள் கண்டனம்


அக்.17,2016. வெனிசுவேலா நாட்டு சிறைச்சாலைகளில், காசநோயாலும், போதிய உணவின்மையாலும், நலவசதிகள் இன்மையாலும் சிறைக்கைதிகள் இறந்துவருவது குறித்து, வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது, அந்நாட்டு ஆயர் பேரவை.

வெனிசுவேலா ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவை வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்நாட்டுச் சிறைக்கைதிகள், சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதுடன், தங்கள் உறவினர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

சிறைக்கைதிகளின் மனித உரிமைகள் மதிக்கப்படுவதுடன், அவர்கள் அடிப்படை மனித மாண்புடன் வாழ்வதற்குரியச் சூழல் உருவாக்கித் தரப்படவேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளது, ஆயர்களின் நீதி மற்றும் அமைதி அவை.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.