2016-10-25 15:34:00

இங்கிலாந்தில் மாத இறுதியில் சிரியா அமைதிக்கு இணைந்த செபம்


அக்.25,2016. இம்மாதம் 31ம் தேதி, அதாவது வரும் திங்களன்று, இங்கிலாந்தின் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ சபைகள் இணைந்து, சிரியாவிற்கான செப வழிபாட்டை நடத்த உள்ளன.

சிரியாவில், அமைதி நிலவுவதற்கென, உலகில் உள்ள அனைத்து மக்களும் செபிக்க வேண்டும் என, திருத்தந்தை தொடர்ந்து அழைப்பு விடுத்துவருவதை முன்னிட்டு,  இங்கிலாந்தில் Pax Christi, CAFOD அமைப்புகள், மற்றும், லூத்தரன் அவை ஆகியவை இணைந்து இம்மாதக் கடைசி நாளின் செப வழிபாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளன.

இங்கிலாந்தின் தனியார்கள், பங்குத்தளங்கள், சமூகங்கள் என அனைத்தும் தங்களுக்கு இயைந்த நேரத்தில் இந்த அமைதிக்கான செப வழிபாட்டை ஏற்று நடத்த வேண்டும் என விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும், பல இலட்சக்கணக்கானோர் குடிபெய‌ர வைக்கப்பட்டும் உள்ள சிரியாவின் உள்நாட்டுச் சண்டை முடிவுக்கு வரவேண்டும் என செபிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார்.

ஆதாரம் :  PaxChristi /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.