2016-10-31 15:46:00

கிறிஸ்தவ ஒன்றிப்புக்காக செபிக்க திருத்தந்தை அழைப்பு


அக்.31,2016. இத்திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு நாட்கள், சுவீடன் நாட்டில் திருப்பயணம் மேற்கொண்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்புக்காக இப்பயணம் உதவ செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

சுவீடன் நாட்டிற்கான தன் பயணம், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு தன் பங்கை வழங்குமாறு செபிக்க வேண்டும் என, திருத்தந்தை, ஞாயிறன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தி விண்ணப்பித்துள்ளது.

இதற்கிடையே, இரக்கத்தின் யூபிலி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, வரும் ஞாயிறன்று, உரோம் நகர் தூய பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், சிறைக்கைதிகளுக்கான யூபிலித் திருப்பலி, திருத்தந்தையின் தலைமையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருடன், குறிப்பிட்ட தினங்களில், திருத்தந்தையின் திருப்பலியுடன் சிறப்பிக்கப்பட்டுவரும் இந்த யூபிலி ஆண்டு கொண்டாட்டங்கள், நவம்பர் மாதம் 20ம் தேதி, கிறிஸ்து அரசர் திருவிழாவன்று, நிறைவுக்கு வரும்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.