2016-11-03 16:04:00

இறந்த கர்தினால்கள், ஆயர்களுக்கு சிறப்புத் திருப்பலி


நவ.03,2016. "கிறிஸ்தவ வாழ்வு ஒரு பயணம், ஆனால், இது ஒரு சோகம் நிறைந்த பயணம் அல்ல, மகிழ்வு நிறைந்த பயணம்" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 3, இவ்வியாழன் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

@Pontifex என்ற முகவரியுடன் இயங்கிவரும் திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில், நவம்பர் 2ம் தேதி முடிய 998 டுவிட்டர் செய்திகள் வெளியாகியுள்ளன என்பதும், இச்செய்திகளைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை, 9,956,301 என்பதும் குறிப்பிடத்தக்கன.

மேலும், நவம்பர் 4, இவ்வெள்ளி காலை 11.30 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில், கூட்டுத் திருப்பலி நிகழும் என்று, திருப்பீட திருவழிபாட்டு அலுவலகம் அறிவித்துள்ளது.

2015ம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கி, இவ்வாண்டு அக்டோபர் மாதம் முடிய, இறையடி சேர்ந்த கர்தினால்கள், ஆயர்கள் ஆகியோரின் ஆன்ம இளைப்பாற்றிக்கென இத்திருப்பலி சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.