2016-11-23 16:07:00

வறியோர், நோயுற்றோரைத் தேடிச் செல்வதை நிறுத்தவேண்டாம்


நவ.23,2016. இரக்கத்தின் யூபிலி நிறைவு பெற்றாலும், வறியோர், நோயுற்றோர், மற்றும் ஆன்மீகத் தேவைகளில் இருப்போர் ஆகியோரைத் தேடிச் செல்வதை நாம் நிறுத்தவேண்டாம் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் புதியத் தலைவர், கர்தினால் டேனியல் தினார்தோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆயர் பேரவைத் தலைவர் என்ற முறையில், கர்தினால் தினார்தோ அவர்கள், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இறுதியில் மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இரக்கத்தை வெளிப்படுத்தும் செயல்பாடுகள் இவ்வுலகில் தொடரவேண்டும் என்பதை வலியுறுத்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள "இரக்கமும் அவலநிலையும்" என்ற திருத்தூது மடல் நம்மை தூண்டுகிறது என்று கர்தினால் தினார்தோ அவர்கள் இம்மடலில் கூறியுள்ளார்.

கிறிஸ்துவின் இரக்கம் நிறைந்த இதயம் அனைத்து பாவங்களையும் மன்னிக்க வல்லது என்ற உணர்வை இந்த யூபிலி ஏற்படுத்தியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் தினார்தோ அவர்கள், இரக்கத்தின் ஆண்டு, இனி, இரக்கம் நிறைந்த வாழ்வாக மாறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : USCCB / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.