2016-11-28 16:51:00

ஜிம்பாப்வே நாட்டில் உரிமைகள் மதிக்கப்பட இலண்டன் செபவழிபாடு


நவ.,28,2016. ஜிம்பாப்வே நாட்டில் உரிமைகளுக்கான போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கென இலண்டன் நகரின் ஜிம்பாப்வே தூதரகம் எதிரே மெழுகுவர்த்தி ஏற்றிய செப வழிபாடு இடம்பெற்றது.

2002ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து, ஒவ்வொரு மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று மாலை,  ஜிம்பாப்வே நாட்டில் மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும் என்ற நோக்குடன் செப வழிபாடு இடம்பெறுகிறது.

ஏனைய மாத இறுதி சனிக்கிழமைப் போன்று, கடந்த சனிக்கிழமையன்றும், செப வழிபாட்டுடன், இசை நிகழ்ச்சி, நடனம், முக்கிய நபர்களின் உரை, தகவல் மையங்கள் அமைத்தல் போன்றவை இடம்பெற்றன.

அனைத்துலக கண்காணிப்பாளர்களின் கீழ் ஜிம்பாப்வே நாட்டில் சுதந்திர தேர்தல் இடம்பெறும்வரை, இந்த இறுதி சனிக்கிழமை செபவழிபாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : ICN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.